“நான் நானாக”

நேவிஸ் பிலிப் கவி இல்(416)
நான் நானாகி
மனதளவில் தோப்பாகி
எதிர் பார்ப்பு ஏதுமின்றி
செழித்தே நான் வளர்ந்திடுவேன்

எனக்கு நானேயென
என் முனங்கல் இசையாக
எனக்கென ஓர் உலகம்
என்னைச் சுற்றி அமைத்திடுவேன்

எ்னை நாடி வருவோரை
அனபோடு அணைத்திடுவேன்
மனம் நோகா வண்ணம்
எந்நாளும் காத்திடுவேன்

என் கவலை என்னோடு
இடர் வரினும் கலங்க மாட்டேன்
நடப்பது நடக்கட்டும்
அடுத்தவர் வார்த்தையில்
நோக மாட்டேன்
நான் நானாக இருக்கும் வரை
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading