நான் யாரோ

Selvi Nithianandan

நான் யாரோ

மருத்துவத்தின் பயனாய்
மணத்திலே சிறப்பாய்
மார்பிலே சாந்தாய்
மானிடத்தின் விருப்பாய்

விலையிலே வேறாய்
நிலையிலே சேர்வாய்
சிலையிலே உருவமாய்
கலையிலே வணிகமாய்

சருமத்துக்கு குளிராய்
சுமாரான உயரமாய்
சுவையில் துவர்ப்பாய்
சூட்டுக்கு அகர்வாய்

மூவகை நிறமாய்
மூலிகை கலவையாய்
முதலீடு பொருளாய்
முடிவிலும் செல்வாயே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading