சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..

சிவருபன் சர்வேஸ்வரி

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..

எண்ணும் எண்ணமெல்லாம் ஈடேறி நின்றிடுமா //
ஏற்றமாக நினைத்தாலும் நினைத்ததெல்லாம் நடந்திடுமா //

நீங்காத நினைவுகள் அலையலையாய் மிதந்துவரும் //

மங்காமல் மனதினிலே அடுக்கடுக்காய் தேன்றிவிடும் //
பொங்கிவரும் கற்பனைகள் புதுயுகத்தை காட்டிவரும்//

நிலைப்பது என்பது கனவாகக் கலைந்துவிடும் //
இலட்சியப் பாதையிலே கலைவைத்து நடக்க நினை //
உண்மையின் நேர்மையைக் கடைப்பிடித்து பின்பற்று //
சோதனையும் வேதனையும் சுற்றியே வந்தபோதிலும் //
சாதிக்கும் சத்தியசோதனை நடந்துகொண்டே இருந்தாலும் //
நினைப்பதெல்லாம் நிறைவேறும் நீயிருந்தால் என்னோடென்று //

தாவியே பாவிவரும் நம்பிக்கை வைக்கும்மனசுக்கு //
உண்மை உறங்காது ஊமையாகினாலும் வெளியாகுமென்பதுபோல் //
நன்மையாக நினைத்தால் நினைப்பதெல்லாம் நடக்கும் //

இதுதான் வாழ்க்கை என்றெண்ணாதே// இப்படித்தான் வாழவேண்டும் என்றவரமே வரப்பிரசாதமாகும்//

சத்தியவழியும் பற்றியவருளும் அப்பழுக்கு இல்லையெனில் //
ஐயமே தேவையில்லை ஐதீகம் உணர்த்தும் உண்மை //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan