” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..

சிவருபன் சர்வேஸ்வரி

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..

எண்ணும் எண்ணமெல்லாம் ஈடேறி நின்றிடுமா //
ஏற்றமாக நினைத்தாலும் நினைத்ததெல்லாம் நடந்திடுமா //

நீங்காத நினைவுகள் அலையலையாய் மிதந்துவரும் //

மங்காமல் மனதினிலே அடுக்கடுக்காய் தேன்றிவிடும் //
பொங்கிவரும் கற்பனைகள் புதுயுகத்தை காட்டிவரும்//

நிலைப்பது என்பது கனவாகக் கலைந்துவிடும் //
இலட்சியப் பாதையிலே கலைவைத்து நடக்க நினை //
உண்மையின் நேர்மையைக் கடைப்பிடித்து பின்பற்று //
சோதனையும் வேதனையும் சுற்றியே வந்தபோதிலும் //
சாதிக்கும் சத்தியசோதனை நடந்துகொண்டே இருந்தாலும் //
நினைப்பதெல்லாம் நிறைவேறும் நீயிருந்தால் என்னோடென்று //

தாவியே பாவிவரும் நம்பிக்கை வைக்கும்மனசுக்கு //
உண்மை உறங்காது ஊமையாகினாலும் வெளியாகுமென்பதுபோல் //
நன்மையாக நினைத்தால் நினைப்பதெல்லாம் நடக்கும் //

இதுதான் வாழ்க்கை என்றெண்ணாதே// இப்படித்தான் வாழவேண்டும் என்றவரமே வரப்பிரசாதமாகும்//

சத்தியவழியும் பற்றியவருளும் அப்பழுக்கு இல்லையெனில் //
ஐயமே தேவையில்லை ஐதீகம் உணர்த்தும் உண்மை //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan