” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

20.2.25
ஆக்கம் 179
நினைப்பதெல்லாம்
நடந்து விட்டால்

காலத்தின் கோலம்
வேண்டும் வேண்டாத
பிறப்பும் இறப்பும் வந்திடுமே

பூக்கள் பூப்பதும்
பூத்தது உதிர்வதும்
இளமை முதுமை
இயற்கையின் வரப்பிரசாதமாய்த்
தந்திடுமே

அடியும் முடியும் தேடி
அலையும் மானிடர்
மனதில் நிலையற்ற
வாழ்வின் எடுத்துக் காட்டாகப் பதிந்திடுமே

கனத்த நினைவுகளில்
காணும் கனவுகள் நிறைவேறாது கடந்து
விட்ட காலம் சிதைந்திடுமே

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் முயற்சி
எடுக்காத முடுக்கு
மேல் நோக்கி செல்ல
விடாது கீழ் நோக்கிச் சென்று உயர்வு இல்லாது அற்புத
வாழ்வு தொலைந்திடுமே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan