சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…..

இரா.விஜயகௌரி

நினைப்பதற்கும நடப்பதற்கும்
இடையிலெழும் செயல்கள்-அவை
நினைவதனில் சிறப்பாகும்
செயலாயின் மகிழ்வாமோ…

வாழ்க்கையொரு. சூதாட்டம்
வெல்பவர்க்கும் தோற்பவர்க்கும்
இடையெழுதும் போராட்டம்
அதற்குள்ளே பல சூட்சுமங்கள்

எட்டாக்கனி இனித்தெழுதும் அது
கைக்கிடைப்பின் அருமை கெடும்
கற்பனைக்கும் வாழ்வமைக்கும்
பொழுதினுக்கும் இடையிலெழும்
கணங்களெல்லாம். அதிரடிகள்

கானல்நீர் கனவில் வரும்
பெருஞ்செழிப்பை. வரவில் இடும்
முயற்சியொடு முனைப்பெழுதும் பெருவாழ்வு
நடைமுறையாய் பெருவிதியாய்
அழகாகும்அது அருமைபட வாழ்வாகும்

Nada Mohan
Author: Nada Mohan