” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…..

இரா.விஜயகௌரி

நினைப்பதற்கும நடப்பதற்கும்
இடையிலெழும் செயல்கள்-அவை
நினைவதனில் சிறப்பாகும்
செயலாயின் மகிழ்வாமோ…

வாழ்க்கையொரு. சூதாட்டம்
வெல்பவர்க்கும் தோற்பவர்க்கும்
இடையெழுதும் போராட்டம்
அதற்குள்ளே பல சூட்சுமங்கள்

எட்டாக்கனி இனித்தெழுதும் அது
கைக்கிடைப்பின் அருமை கெடும்
கற்பனைக்கும் வாழ்வமைக்கும்
பொழுதினுக்கும் இடையிலெழும்
கணங்களெல்லாம். அதிரடிகள்

கானல்நீர் கனவில் வரும்
பெருஞ்செழிப்பை. வரவில் இடும்
முயற்சியொடு முனைப்பெழுதும் பெருவாழ்வு
நடைமுறையாய் பெருவிதியாய்
அழகாகும்அது அருமைபட வாழ்வாகும்

Nada Mohan
Author: Nada Mohan