நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்……..

ரஜனி அன்ரன்

நினைப்பதெல்லாம்…..கவி….ரஜனி அன்ரன் (B.A) 20.02.2025

நினைவென்ற ஒன்று இல்லாவிடில்
கனவுகளுக்கும் அர்த்தமென்று எதுவுமில்லை
கனவு காண்பதும் கற்பனையில் மிதப்பதும் கனவாகிட
நினைவு மட்டுமே நமக்காகிட
நடப்பதும் விடுவதும் ஆண்டவன் செயலே
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
அதிசயமே அதிசயம் தான்
ஆச்சரியம் பூச்சொரிய
ஆகாயம் குடை விரிக்கும் !

எண்ணங்கள் சிறகடிக்க ஏற்றங்கள் வலுவாக
வண்ணங்களால் வாழ்வு வளம் கொழிக்க
நினைப்பதெல்லாம் நிகழ்ந்து விட்டால்
வாழ்க்கைப் பாதையும் மாறிட
வாழ்வே சொர்க்கமாகி வனப்பாகுமே !

நிறைவேறா ஆசைகளும் நிறைவேறும்
கறை படிந்த மனசுகளும் கலகலக்கும்
நித்திலமும் புத்தெழிலைப் பெற்றிடும்
நீல வானத்தையும் தொட்டிடலாம்
கால நதியினிலும் நீந்திடலாம்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் !

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading