இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..

சிவதர்சனி

வியாழன் கவி 2110

நினைப்பதெல்லாம்
நடந்துவிட்டால்!!

நினைத்துவிட எண்ணிய பொழுது
நினைவினில் எதுவும் இல்லை
நினைவினில் யாவும் வந்த பொழுது
அவை நிரந்தரம் ஆகிடவில்லை

ஆடும் வரை ஆட்டம் அது முடிய
அனைவரும் போவது ஒரே இடம்
நோக்கமில்லா மானிடமும்
நொந்த மனம் கொண்டோருமாய்..

நடத்துவது யாரோ நாடகத்தை
நலம் சிலபேர் வாழ்வும் ஆகும்
நலம் விடுத்து நலிந்தோரும்
வலிகொண்டு வாழ்கிறாரே..

நினைப்பினில் தவறுமில்லை
அது நடக்கவென நினைப்பது
மானிடப் பிழையுமில்லை- விதி
வசத்தில் என்று விடுதல் மதியுமோ?

நடந்து விட்டால் மகிழ்வு தான்
நடக்கா விட்டால் ஏற்றிடவும்
முடங்காது துணிந்து எழுந்திடவும்
நெஞ்சே நீ பழகிவிடு பணி இடு..
சிவதர்சனி இராகவன்

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading