நினைப்பதெல்லாம் நடந்து வீட்டால்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி :
‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ‘
20/02/25

தொடரலையாய் எண்ணங்கள்
பிறக்கின்ற உள்ளத்தில்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
இன்ப சொப்பனங்கள் கரை புரளும்!

உழைப்பிற்கு ஊதியங்கள் என்கின்ற நிரை ஒழுங்கு
தடம் மாறி தத்தளிக்கும்
தார்மீக பாடங்கள் மீண்டெழும்!!

பொலிகின்ற வான்மேகம்
நிலம் பார்த்து நீர்வார்க்க
வேண்டுதல்கள் தொடராகும்!

வரையறையாய் ஆசை வைத்து
போதுமென்ற பொக்கிஷத்தை
மனதிலே நெறிப்படுத்தி
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
குபேர வாழ்வு கூடி வரும்
கொண்டாட்டம் கும்மாளம்!!

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading