நினைப்பதெல்லாம் நடந்து வீட்டால்

தங்கசாமி தவகுமார்

வியாழன் கவி :
‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ‘
20/02/25

தொடரலையாய் எண்ணங்கள்
பிறக்கின்ற உள்ளத்தில்
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
இன்ப சொப்பனங்கள் கரை புரளும்!

உழைப்பிற்கு ஊதியங்கள் என்கின்ற நிரை ஒழுங்கு
தடம் மாறி தத்தளிக்கும்
தார்மீக பாடங்கள் மீண்டெழும்!!

பொலிகின்ற வான்மேகம்
நிலம் பார்த்து நீர்வார்க்க
வேண்டுதல்கள் தொடராகும்!

வரையறையாய் ஆசை வைத்து
போதுமென்ற பொக்கிஷத்தை
மனதிலே நெறிப்படுத்தி
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
குபேர வாழ்வு கூடி வரும்
கொண்டாட்டம் கும்மாளம்!!

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading