சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..

ரஜனி அன்ரன் (B.A) ...சூடு பிடிக்கிறது....09.07.2026 பச்சைப்புல்வெளி போர்க்களமாக பந்து மட்டும் ஆயுதமாக வீரர்கள் கால்களோ பம்பரமாக...

Continue reading

நடிப்பது மானிடம்!!!

தினக்கவி-2365 நடிப்பது மானிடம்..!! செய்வதெல்லாம் செய்துவிட்டு பொய் தான் உரைத்திடுவார் போதுமென்ற அளவிற்கு நாடகமாய் நடித்து வெல்லுவர் பச்சைப் பிள்ளை...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…

நகுலா சிவநாதன்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…

நினைப்பதற்கு எண்ணம் மனதிலே வகுத்து
தினையது முளைப்பதாய் சிந்தனை முளைத்து
பனைபோலப் பெருகி பக்கவமாய் வளர்ந்து
மனைபோலக் கட்டுமே மாண்புமிகு சிந்தனை

சிந்தையின் நினைவும் சிதறும் எண்ணங்களும்
விந்தையாய் உலகில் வினைத்திறன் விளைவே!
சுந்தர வடிவ சுடர்விடும் எண்ணமே
மந்திர வடிவ மாண்புறு செயலே!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…..
மனதிலே மகிழ்வு மாற்றமாய் உருவாகும்
கனவிலே காரியம் காட்சியாய் பெருகும்
குதூகல மெங்கும் பூத்து விரியும்
கூடவே வரவுகளும் கொட்டி கிடக்கும்

நகுலா சிவநாதன் 1797

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading