சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…

நகுலா சிவநாதன்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…

நினைப்பதற்கு எண்ணம் மனதிலே வகுத்து
தினையது முளைப்பதாய் சிந்தனை முளைத்து
பனைபோலப் பெருகி பக்கவமாய் வளர்ந்து
மனைபோலக் கட்டுமே மாண்புமிகு சிந்தனை

சிந்தையின் நினைவும் சிதறும் எண்ணங்களும்
விந்தையாய் உலகில் வினைத்திறன் விளைவே!
சுந்தர வடிவ சுடர்விடும் எண்ணமே
மந்திர வடிவ மாண்புறு செயலே!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…..
மனதிலே மகிழ்வு மாற்றமாய் உருவாகும்
கனவிலே காரியம் காட்சியாய் பெருகும்
குதூகல மெங்கும் பூத்து விரியும்
கூடவே வரவுகளும் கொட்டி கிடக்கும்

நகுலா சிவநாதன் 1797

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading