நினைவுகள் கனக்கின்றன

நகுலா சிவநாதன்
நினைவுகள் கனக்கின்றன

நினைவுகள் கனக்கின்றன
கனவுகள் கருத்தரிக்கின்றன
துணிவுகள் வீரத்தை விளைநிலமாக்குகின்றன
வார்த்தை வர மறுக்கின்றன!

தாய்த்தேசம் அழுகிறது
தானீன்ற மகவு கல்லறையில் தவிக்கிறது
சொல்ல வந்த வார்த்தைகள்
சுடுகாட்டில் செல்லரித்த ரணமாகிறது

உணர்வுகள் மௌனிக்கின்றன
உள்ளங்கள் கண்ணீரை உகுக்கிறது
செங்கண் குருதி செந்நிலமாகிறது
எங்கள் வீரரே எழுந்து வாருங்கள்

கார்த்திகை 27 காசினியில் ஒளியேற்றம்
பூத்திருக்கும் கார்த்திகையும் புனிதம் பேணும்
காந்தள் மலரெடுத்து காணிக்கை ஆக்குகின்றோம்
போற்றும் வீரம் பொழுதுகளை நிரப்பட்டும்

நகுலா சிவநாதன் 1831

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading