” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

நிழலாடுதே நினைவாயிரம்

நிழலாடுதே நினைவாயிரம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

களமாடுதே எண்ணங்கள் கருத்தாய் மின்னலிட

வளமான நின்ற காலங்கள் எங்கே

நலமான வாழ்வுகள் நலிந்தே போகவும்

திடமான நினைவுகள் திடமின்றி நிழலாடியது

வடமிழுக்க தேர்வரும் வசப்படும் ஊர்வலம்

இடமினிக்க வாழ்ந்த நாளெல்லாம் ஆயிரம்

தடம்பதித்த நேரத்தின் தரமே உயர்ந்தது

படம்முடிந்து போனது போன்றதே இன்றையநிலைகள்

சரித்திரமாய் வாழ்ந்தவர் கோடி கேளாய்

பெளத்திரமாய் மேம்பட்ட மனிதர்கள் நேயமும்

விசித்திரமாய் வாழ்வதில் பெருமை காணவே

பழைசை நினைச்சேன் பதறுதே நெஞ்சமும்

சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading