” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நிழலாடுதே நினைவாயிரம்

நிழலாடுதே நினைவாயிரம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

களமாடுதே எண்ணங்கள் கருத்தாய் மின்னலிட

வளமான நின்ற காலங்கள் எங்கே

நலமான வாழ்வுகள் நலிந்தே போகவும்

திடமான நினைவுகள் திடமின்றி நிழலாடியது

வடமிழுக்க தேர்வரும் வசப்படும் ஊர்வலம்

இடமினிக்க வாழ்ந்த நாளெல்லாம் ஆயிரம்

தடம்பதித்த நேரத்தின் தரமே உயர்ந்தது

படம்முடிந்து போனது போன்றதே இன்றையநிலைகள்

சரித்திரமாய் வாழ்ந்தவர் கோடி கேளாய்

பெளத்திரமாய் மேம்பட்ட மனிதர்கள் நேயமும்

விசித்திரமாய் வாழ்வதில் பெருமை காணவே

பழைசை நினைச்சேன் பதறுதே நெஞ்சமும்

சர்வேஸ்வரி சிவரூபன்

Author: