நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நிழலாடுதே நினைவாயிரம்

நிழலாடுதே நினைவாயிரம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

களமாடுதே எண்ணங்கள் கருத்தாய் மின்னலிட

வளமான நின்ற காலங்கள் எங்கே

நலமான வாழ்வுகள் நலிந்தே போகவும்

திடமான நினைவுகள் திடமின்றி நிழலாடியது

வடமிழுக்க தேர்வரும் வசப்படும் ஊர்வலம்

இடமினிக்க வாழ்ந்த நாளெல்லாம் ஆயிரம்

தடம்பதித்த நேரத்தின் தரமே உயர்ந்தது

படம்முடிந்து போனது போன்றதே இன்றையநிலைகள்

சரித்திரமாய் வாழ்ந்தவர் கோடி கேளாய்

பெளத்திரமாய் மேம்பட்ட மனிதர்கள் நேயமும்

விசித்திரமாய் வாழ்வதில் பெருமை காணவே

பழைசை நினைச்சேன் பதறுதே நெஞ்சமும்

சர்வேஸ்வரி சிவரூபன்

Author: