சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

நிழலாடுதே நினைவாயிரம்

ராணி சம்பந்தர்

நிழலாடுதே நினைவாயிரம்
பழகிய முற்றத்தில் ஓடி ஆடி
விளையாடச் சுற்றஞ் சூழ்ந்த
மனம் நிறை மகிழ்வாயிரமே
அற்றுப் போன கலாச்சாரம்
கழன்றதே அழிவாயிரமாய்.

மனிதன் நிஜ உழைப்பின்றி
வியர்வை சிந்தாது வாழ்ந்திட
குறுக்கு வழியில் புகழ் சேர்க்க
ஏறி விழ அலங்கோலமாயிரம்

தனக்கு உரிமையற்றது அபகரிக்க
களவெனும் போர்வையில் சிக்கித்
தவித்து உயிரற்ற சிலை போலாயிரம்

துவண்டு போகும் நெஞ்சம் தவண்டு
தவண்டாவது தம் சொந்தக் காலில்
உயராது மது ,மாது போதையிலே
அடிமைகள் ஆவது ஆயிரமாயிரம்

பொய் ,பிரட்டு ,உருட்டி உருட்டிப் பேசி
போலி வேஷங்களில் ஜாலியாகிட
நீந்திடும் கற்பனை கானல் நீராகிட
நிம்மதி இழந்து பெற்றோர் வேதனை
ஆகி சாதனை படைக்கும் உயிர்கள்
ஊசலிட நிழலாடுதே நினைவாயிரம்.

Author: