ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

நிழலாடும் நினைவுகள்

நேவிஸ் பிலிப் கவி இல(401) 27/02/25

சின்னஞ் சிறுவயதினிலே
சித்திரமாய் என் நினைவில்
நித்தமும் நிழலாடும்
எனதூரில் என் வாழ்வு

அதிகாலை எழுகை
ஆலய தொழுகை
வாடிக்கைத் தொடராய்
நாளாந்த வாழ்க்கை

இன்பமாய் கழிந்த
இளமை வாழ்வில்
கவலைஎன்று ஏதுமில்லை
சுதந்திரமாய் சுற்றித் திரிந்தோம்

கிராமத்து வனப்பினிலே
ஓடியாடி விளையாடி
கடல் மண்ணில் கால் நனைத்து
களிப்போடு வாழ்ந்திருந்தோம்

கண்டிப்பு கரிசனையாய்
கண்மணி போல் காத்த முன்னோர்
நல்லறிவு புகட்டி எம்மை
நல்வழியில் நடத்தினரே

கண்ணி அன்று மடியில் இல்லை
அலைபேசி கையில் இல்லை
தொலைக்காட்சி பெட்டி இல்லை
விளையாட்டில் வலிமை பெற்றோம்
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading