கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

நிழலாடும் நினைவுகள்

நேவிஸ் பிலிப் கவி இல(401) 27/02/25

சின்னஞ் சிறுவயதினிலே
சித்திரமாய் என் நினைவில்
நித்தமும் நிழலாடும்
எனதூரில் என் வாழ்வு

அதிகாலை எழுகை
ஆலய தொழுகை
வாடிக்கைத் தொடராய்
நாளாந்த வாழ்க்கை

இன்பமாய் கழிந்த
இளமை வாழ்வில்
கவலைஎன்று ஏதுமில்லை
சுதந்திரமாய் சுற்றித் திரிந்தோம்

கிராமத்து வனப்பினிலே
ஓடியாடி விளையாடி
கடல் மண்ணில் கால் நனைத்து
களிப்போடு வாழ்ந்திருந்தோம்

கண்டிப்பு கரிசனையாய்
கண்மணி போல் காத்த முன்னோர்
நல்லறிவு புகட்டி எம்மை
நல்வழியில் நடத்தினரே

கண்ணி அன்று மடியில் இல்லை
அலைபேசி கையில் இல்லை
தொலைக்காட்சி பெட்டி இல்லை
விளையாட்டில் வலிமை பெற்றோம்
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading