” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நிழலாடும் நினைவுகள்

நேவிஸ் பிலிப் கவி இல(401) 27/02/25

சின்னஞ் சிறுவயதினிலே
சித்திரமாய் என் நினைவில்
நித்தமும் நிழலாடும்
எனதூரில் என் வாழ்வு

அதிகாலை எழுகை
ஆலய தொழுகை
வாடிக்கைத் தொடராய்
நாளாந்த வாழ்க்கை

இன்பமாய் கழிந்த
இளமை வாழ்வில்
கவலைஎன்று ஏதுமில்லை
சுதந்திரமாய் சுற்றித் திரிந்தோம்

கிராமத்து வனப்பினிலே
ஓடியாடி விளையாடி
கடல் மண்ணில் கால் நனைத்து
களிப்போடு வாழ்ந்திருந்தோம்

கண்டிப்பு கரிசனையாய்
கண்மணி போல் காத்த முன்னோர்
நல்லறிவு புகட்டி எம்மை
நல்வழியில் நடத்தினரே

கண்ணி அன்று மடியில் இல்லை
அலைபேசி கையில் இல்லை
தொலைக்காட்சி பெட்டி இல்லை
விளையாட்டில் வலிமை பெற்றோம்
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan