01
Jul
நிழல் தேடும் வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள் அடங்கி
நிஜத்தைத் தொலைத்து
நிழல்களை நினைத்து
மௌனியாகி மரணித்து
மனதோடு...
செல்வி நித்தியானந்தன்
நிழல் தேடும் வேளை
ஆதவனின் அகோர வெப்பம்
ஆட்டமும் பலநாடாய் கண்டதே
ஆறு குளம் குட்டை தேடியே
ஆர்வமாய் பலரும் நாடியே
சுட்டெரிக்கும் சூரிய ஒளியே
சுழல் காற்றை மறந்தும்
சூழலை மாற்றி அமச்சும்
சுமையான சுகத்தை தருவாயே
மரங்களிள் நிழல்களைத் தேடியே
மானிடரும் மாக்களாய் ஓடியே
மாட்சியாய் புல்லினமும் நாடியே
மகிழ்வுடன் தொலைய வாடியே
நிழல் தேடியே புலம்பலாய்
தழல் போன்று எரிவாய்
நண்பகலும் நல் முடங்களாய்
நடு நிசியும் பகலாய் தோற்றமே
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.