நிழல் தேடும் வேளை 92

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-07-2026

சுட்டெரிக்கும் சூரிய ஒளியில்
சுருங்கிப் போனது பூமியும கூட
தஞ்சம் புகவோ இடமுமில்லை
தகரக் காற்று வீசுது நகரத்திலே

வெட்டிச் சாய்த்த மரங்களின் சாபமோ?
வெப்பக் காற்றாய் வீசுது இங்கே
விண்வெளி வரை ஆராய்ச்சி கண்டீர்
வீட்டிற்கொரு மரம் வளர்த்தீரா?

காசைத் தேடி ஓடிய நீயும்
காற்றைத் தேடிக் கண்டு பிடி
மரத்தின் நிழல் தேடும் வேளை
மனதின் நிழலையும் தேடிக்கொள்!

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading