ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன்

வேலும் நூலும்

வேரின் கூர்மையும்
நூலின் அறிவும்
வேண்டும் வாழ்விற்குத்
தேவை என்றுமே!

வேரின் கூர்மை
அசுரரை அழித்து
மக்களைக் காத்ததே
நூலின் நுண்ணறிவு
நுணுகிக் கற்க
வாய்ப்பாகியதே

சஷ்டியில் முருகன்
வெற்றி கொண்டது சூரனை
பற்றித் தமிழ் வளர
பற்றுக்கொண்டு
நூலைப் படித்திடு
நுண்ணறிவுகளைப்
பெறுவாய்

நூலும் வேலும்
நுட்பம் காண
நாளும் கோளும்
நன்மை அளிக்க
நல்ல செயல்கள்
நாற்றாய் கொழிக்கட்டும்

நகுலா சிவநாதன்1826

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading