பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நேவிஸ் பிலிப் கவி இல (108) 06/07/23

வரப்புயர!!!

கரையில்லா குளமும்
அணையில்லாஆறும்
பெருக்கெடுக்கும் வெள்ளத்திலே
கரை புரண்டு ஓடுதல் போல்

நன்னெறி ஒழுக்கம்
பேணாதோரக்கும்
சொல்புத்தி கேளாது
பறக்கணித்து வாழ்வோருக்கும்

கூறுகின்ற அறிவுரைகள்
புறக்குடத்தில்
வார்த்த நீர் போல
பாழாய்த்தான் போய் விடுமே

வரப்பில்லா வயல்தனிலே
வழிந்தோடும் நீர்த்துளிகள்
புல்லுக்கும் பொசிந்தங்கே
களைகளையும் வளர்த்திடுமே

உள்ளமெனும் நிலந்தன்னை
நற்செயலால் பண்படுத்தி
பக்குவமாய் வரப்புயர்த்தி
பருவத்தே பயிர் செய்து

விழிப்புடனே காத்து வந்தால்
வரப்புயர நீருயர்ந்து
நெற்கதிர்கள் செழித்துயர்நு
குவிந்து வரும் நெல் மணிகள்
வாழ்வுதனை வளமாக்குமன்றோ!!!

அனைவருக்கும் நன்றிகளோடு
ணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan