மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

நேவிஸ் பிலிப்

வியாழன் கவி இல(90) 16/02/23
புழுதி வாரி எழும் மண் வாசம்

புழுதி வாரி எழும் மண் வாசம் எம்
மனங்களில் ஒளிரும் பொன் தேசம்
அகழும் மனிதரையும் தாங்கிடும் நேசம்
வேரை விழுதுகளை அணைத்திடும் பாசம்
புரிகிறதா மனிதா உனக்குப் புரிகிறதா.?

பண்பட்ட நிலத்தினிலே
பயிரிட்டு வளர்த்தெடுத்து
பக்குவமாய் தொகுத்தெடுக்கும்
பண்பாடு தெரிகிறதா மனிதா
உனக்குப் புரிகிறதா?

புழுதி வாரி எழும் மண் வாசம்
ஒன்று பட்டு வாழ்வதிலும்
ஒற்றுமையை வளர்ப்பதிலும்
இணைந்து வாழும் பொருள் தெரிகிறதா
மனிதா உனக்குப் புரிகிறதா?

தாயை மிதிப்பது போல்
இயற்கையை சேர்த்தழித்து
என்ன இன்பம் கண்டாய் மனிதா
வாழ்வாதாரமழித்து பொன் பொருளை
சேர்த்து வைத்து
கண்ட பலன் என்ன மனிதா?

மனங்களைப் பண்படுத்தி
களைகளை வேரறுத்து
புதைத்ததை உரமாக்குவோம் நாம்
விதைத்ததை மரமாக்குவோம்

கற்றுக் கொண்டோம்
நாம் கற்றுக் கொண்டோம்
புழுதி வாரி எழும் மண் வாச
நேசமதை கற்றுக் கொண்டோம்
நாம் கற்றுக் கொண்டோம்.
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading