மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

:நேவிஸ் பிலிப்

கவி இல( 91) 23/02 /23
பண்ணிசை

வெள்ளியில் துள்ளி வரும் பண்ணிசை
இன்சுவையாய் இனிக்குது
பாமுகத்தில் இசைக்குது
வெள்ளியில் துள்ளி வரும் பண்ணிசை

வண்ணத் தமிழால் சொல் தொடுத்து
பாடுகின்ற பண்ணிசை
கடவுள் மனதையும் கரைக்குது
கேட்போர் மனமும் உருகுது

இளையவரும் பெரியோரும்
பாடுகின்ற பண்ணிசை
எட்டுத் திக்கும் பரவுது கை
தட்டித் தட்டி ரசிக்குது

பாமுகத்தின் முற்றம் தானே
ஆலயமாய் மிளிருது
இறையின்ஆசீ அருள் மழையாய்
அனைவர் மீதும் பொழியுது

தமிழ் வளர்க்கும் பாமுகம்
எம்மை நெம்பி எழுப்பும் நேர் முகம்
மங்கா ஒளியில் வாழவே
பொங்கும் மகிழ்வில் வாழ்த்துறோம்.
நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading