இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல (98) 13/04/23
சித்திரை வந்தாலே

சித்திரை வந்தாலே கோடையும்
கூட வர ,வசந்த கால கீதங்களும்
வண்ண வண்ண கோலங்களும்
இத்தரையில் நிறைந்து பொலியுது

புத்தாண்டு பூத்து வர
புத்துணர்ச்சி பொங்கிவரும்
புதுப் புதுச் சிந்தனைகள்
பூப் பூவாய் மலர்ந்திடுமே

சித்திரையால் வையகத்தில்
நல்லாட்சி அமைந்திடணும்
நலம் தரும் சிந்தனையால்
நல்லாட்சி மலர்ந்திடணும்

நிறைந்த நெஞ்சினிலே
நித்தமும் நிம்மதி
முத்தான முன்னேற்றம்
முத்திரையாய் பதித்திடுமே

சிங்காரச் சித்திரையே
மக்கள் மனம் மகிழ
விழித்திடு உன் விழித்திரையை
இன்னருளை வழங்கிடு பூவுலகில்

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading