” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல (98) 13/04/23
சித்திரை வந்தாலே

சித்திரை வந்தாலே கோடையும்
கூட வர ,வசந்த கால கீதங்களும்
வண்ண வண்ண கோலங்களும்
இத்தரையில் நிறைந்து பொலியுது

புத்தாண்டு பூத்து வர
புத்துணர்ச்சி பொங்கிவரும்
புதுப் புதுச் சிந்தனைகள்
பூப் பூவாய் மலர்ந்திடுமே

சித்திரையால் வையகத்தில்
நல்லாட்சி அமைந்திடணும்
நலம் தரும் சிந்தனையால்
நல்லாட்சி மலர்ந்திடணும்

நிறைந்த நெஞ்சினிலே
நித்தமும் நிம்மதி
முத்தான முன்னேற்றம்
முத்திரையாய் பதித்திடுமே

சிங்காரச் சித்திரையே
மக்கள் மனம் மகிழ
விழித்திடு உன் விழித்திரையை
இன்னருளை வழங்கிடு பூவுலகில்

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan