நேவிஸ் பிலிப்

23/03/22 வியாழன் கவிதை இல( 54)
துளி நீர்
நீரின்றி உலகு அமையாது -துளி
நீரின்றி உயிரும் வாழாது
தவித்த வாய்க்கு துளி நீரின்றி
ஏங்குது வையகம் அமைதியின்றி

சுந்தரமாய் திகழ்ந்த சுதந்திர பூமியில்
குளிர் நீரோடையருகில் நிழல் தரும் மரங்கள்
ஆதி மனிதன் ஆனந்தமாய் -நீரை
அள்ளிப் பருகினான் தாகம் தீர்த்தான்.

பனித் துளி ,புல் நுனியில் பள பளக்க
புள்ளினங்கள் கூடியங்கே இதமாய்ப் பருக
கடலில் விழுந்த மழைத் துளியுமே
விளையுது வெண் முத்தாய் சிப்பிக்குள்ளே

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மனிதன்
நாகரீக வளர்ச்சி கண்டு மடமை கொண்டு
மரமறுத்து,நதி மறிக்க ,நிலம் வறள நீரும் வற்ற
காற்று மழையின்றி பூமியும் சூடாக

குடி தண்ணீருக்காய் தொலை தூரம் நடந்து
பாத ரேகை தேயுது மனிதனுக்கு
கால்நடை ஏங்குது தாகம் தீர்க்க
பயிர் பச்சை சோருதெங்கும் துளி நீருக்காய்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading