பசுமை

செல்வி நித்தியானந்தன்
பசுமை

பசுமை என்றாலே
பார்க்கும் விழிகளில்
பரவசம் உண்டாகும்
பாரும் செழிப்புறும்
மரம்செடி கொடியும்
பசுமை காட்சியாகும்
மழையும் பொழிந்து
உயிர்ப்பாய் சாட்சியாகும்
பசிபோக்க விலங்கும்
புற்களை உண்டிடும்
பறவையும் புசிக்க
பசுமையை நாடிடும்
தெருவோர மரமும்
தென்றலாய் தழுவும்
தருவும் அழித்து
பசுமை மறையுதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading