10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
வசந்தா ஜெகதீசன்
பட்டமரம்…
சரித்திரத்தின் உயிர்ப்பு சாதனையின் உழைப்பு
இருப்பிடத்தில் இன்று
இயங்காது உறங்கும்
முதியோர் காப்பகத்தில்
முடங்கியே கிடக்கும்
ஆற்றலின் விருட்சமாய்
அனுபவத்தின் தேட்டமாய்
சுறுசுறுப்பின் மகுடமாய்
சுழன்று வந்த மனிதமே
இல்லறத்தின் இலக்கிலே
ஈகையாய் ஈர்ந்திட்ட
வள்ளல்கள் பலரின்று
பசுமை குன்றிட
பருவங்கள் தளர்ந்திட
பட்டமரமாகி
பாடுகள் பலவாகும்
பரிதாப நிலையிலே
பட்டறிவின் தருக்களே
பட்டமரப் பயன்களே!
நன்றி மிக்க நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.
Notifications