பட்டமரம்..

வசந்தா ஜெகதீசன்

பட்டமரம்…
சரித்திரத்தின் உயிர்ப்பு சாதனையின் உழைப்பு
இருப்பிடத்தில் இன்று
இயங்காது உறங்கும்
முதியோர் காப்பகத்தில்
முடங்கியே கிடக்கும்
ஆற்றலின் விருட்சமாய்
அனுபவத்தின் தேட்டமாய்
சுறுசுறுப்பின் மகுடமாய்
சுழன்று வந்த மனிதமே
இல்லறத்தின் இலக்கிலே
ஈகையாய் ஈர்ந்திட்ட
வள்ளல்கள் பலரின்று
பசுமை குன்றிட
பருவங்கள் தளர்ந்திட
பட்டமரமாகி
பாடுகள் பலவாகும்
பரிதாப நிலையிலே
பட்டறிவின் தருக்களே
பட்டமரப் பயன்களே!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading