” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பட்டமரம்..

வசந்தா ஜெகதீசன்

பட்டமரம்…
சரித்திரத்தின் உயிர்ப்பு சாதனையின் உழைப்பு
இருப்பிடத்தில் இன்று
இயங்காது உறங்கும்
முதியோர் காப்பகத்தில்
முடங்கியே கிடக்கும்
ஆற்றலின் விருட்சமாய்
அனுபவத்தின் தேட்டமாய்
சுறுசுறுப்பின் மகுடமாய்
சுழன்று வந்த மனிதமே
இல்லறத்தின் இலக்கிலே
ஈகையாய் ஈர்ந்திட்ட
வள்ளல்கள் பலரின்று
பசுமை குன்றிட
பருவங்கள் தளர்ந்திட
பட்டமரமாகி
பாடுகள் பலவாகும்
பரிதாப நிலையிலே
பட்டறிவின் தருக்களே
பட்டமரப் பயன்களே!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan