சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

இவை வரைந்த சொற்களால்
இழந்த மனிதங்கள் உயிர் பெறுகின்றன
இவை எழுதிய வரிகளில் இனங்களின் சரித்திரங்கள் உறங்குகின்றன

பல நேரம் காதலின் வாசத்தை வீசும்
சில நேரம் புரட்சியின் வீரியம் பேசும்
கையில் தழுவிய இதனோடு படைக்கும் படைப்புகள் பலநூறு
கருத்துக்கள் இதன் வழியாய் காகிதத்தில் கொட்டும்
உணர்வுகள் இதன் நுனியூடு மையாலே உயிர் பெறும்

அறிவின் கதவுகளை திறந்துவிடும் திறவுகோல்
காலம் அழிக்காத பதிவுகளை பதிந்துவிடும் எழுதுகோல்
வாள்கள் வெல்லாதவிடத்திலும் இவை வென்றுவிடும்
போரால் சரிந்த உலகை வரியால் கட்டிவிடும்

ஜெயம்
03-06-2026

Nada Mohan
Author: Nada Mohan