பதியமிடும் எழுத்தாணிகள்

இவை வரைந்த சொற்களால்
இழந்த மனிதங்கள் உயிர் பெறுகின்றன
இவை எழுதிய வரிகளில் இனங்களின் சரித்திரங்கள் உறங்குகின்றன

பல நேரம் காதலின் வாசத்தை வீசும்
சில நேரம் புரட்சியின் வீரியம் பேசும்
கையில் தழுவிய இதனோடு படைக்கும் படைப்புகள் பலநூறு
கருத்துக்கள் இதன் வழியாய் காகிதத்தில் கொட்டும்
உணர்வுகள் இதன் நுனியூடு மையாலே உயிர் பெறும்

அறிவின் கதவுகளை திறந்துவிடும் திறவுகோல்
காலம் அழிக்காத பதிவுகளை பதிந்துவிடும் எழுதுகோல்
வாள்கள் வெல்லாதவிடத்திலும் இவை வென்றுவிடும்
போரால் சரிந்த உலகை வரியால் கட்டிவிடும்

ஜெயம்
03-06-2026

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading