பத்மலோஜினி திருச்செந்தூர்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு – 239

தலைப்பு – ஆறு மனமே

மாசில்லா உலகில் மாசற்ற மனங்கள்
மறுமலர்ச்சி தேடி மோசடியற்ற மனிதம்அன்று
மாறாவடுக்களாய் மார்க்கங்களின் மூர்க்கத்தை மூட்டிவிட்டு
மனமே மனசாட்சியை மாற்றுசத்திர சிகிட்சையில்இன்று.

கொடுமைகள் அரங்கேறியும் கழுதைப்புலியாய்(hyenas) அரசதலைவர்கள்
அரேங்கேற்ற வியாபாரம்போல் அதிகாரநாட்டுகளின் ஆணவங்களால்
அகதிகளாய் அல்லல்லுறும் அப்பாவி் பொதுமக்களும்
இடுப்பிற்குகீழ்மேல்லென குழந்தைகளுக்கு பெயர்பதிக்கும் பலஸ்தீனர்கள்.

ஆபிராகாம் வழிவந்து மோசஸ்சால் வழிகாட்டப்பட்டவர்களே
அறிவால் உலகை ஆளும் ஆதிக்கவாதிகளே
அநியாயம்மென்று தெரிந்தும் அப்பாவிகளை அழிப்பவர்களே
ஆறவில்லை என்மனம் ஆறுமுகனே காப்பாற்றுவாயா?!

நன்றி. வணக்கம்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
23/10/2023
London

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading