பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது போன்ற வார்த்தையும்
பாசமலரே பாய்ந்தது தேனாறாய் அகத்திலே
மோசமில்லாத உறவோடு பழகவும் வைத்த இறைவனை
பக்தியோடு வணங்கிடவே பற்றினேன் பாதமதை
பொக்கிசமான மனதோடு பண்புடனே நடந்தால்
காத்திரமான கருணையும் உலகிலே பிறந்தால்
சாத்திரம் தேவையில்லை கண்ணே என்றும்
நிம்மதி பிறக்குமி நித்தலமாய் நின்றே
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading