28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
“பாசப் பகிர்வினிலே”
நேவிஸ் பிலிப் கவி இல(436)
நெஞ்சினில் ஈரம்
கண்களில் கருணை
சொல்லில் கனிவு
எல்லைற்ற அன்பு
மூச்சுக் காற்றீந்து
முன்நூறு நாள் மடி சுமந்து
மாசில்லா மாரமுதூட்டிய
தூசில்லா தூயவளே
இன்ப துன்பமுடன்
சோக வலிகள் சூழ்ந்த போதும்
பாரமேற்றும் படகு போன்றெம்மை
பக்குவமாய் கரை சேர்த்தாய்
மழை பெய்த நாட்களெல்லாம்
இடுப்பினிலே எனைச் சுமந்து
புடவை முந்தானையை குடையாக்கி
நீ நனைந்தென்னைக் காத்த பாசம்
எப்படி நான் மறப்பேனோ..??
மறு பிறவி உண்டென்றால்
என் மகளாய் நீ பிறக்க
தேயாத செருப்பாய் நான் பிறக்க
தேவ அருள் வேண்டுகிறேன்
நாளும் உன்னை சுமந்திடவே,!!!
பாசமுடன் நன்றி வணக்கம்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...