நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

பாசப் பகிர்வினிலே…

வசந்தா ஜெகதீசன்
தாயென்னும் தைரியத்தில்
தற்காத்த பொக்கிஷத்தில்
உறவான தொப்புள்கொடி
உதிரத்தின் தொடர்புவழி
அகிலத்தில் எமையீன்று
அரவணைத்துக் காத்த தாய்
உதிரத்தை பாலாக்கி
உயிர் மெய்யாய் உணர்வூட்டி
உளமெல்லாம் எமக்காக்கி
உயர்விற்கு வழிகாட்டி
கல்விக்கு அகரமிட்டு
கண்காணித்து வளர்த்ததாயே
கைமாறு கருதாத கருணையின் பேரன்பே
பாசத்தின் பகிர்வினில் பாரபட்சமற்ற தாயே
நேசத்தின் நிறைமதி- நீங்கள்
நேர்மைக்கு நீதிபதி!
அன்பிற்கு அட்சயம்
அம்மா என்னும் பொக்கிசம்
இதயத்தின் தாரகை
வரமெனப் பெற்றதாய்
வாழ்வெல்லாம் போற்றுவேன்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan