பாசப் பகிர்வினிலே…

வசந்தா ஜெகதீசன்
தாயென்னும் தைரியத்தில்
தற்காத்த பொக்கிஷத்தில்
உறவான தொப்புள்கொடி
உதிரத்தின் தொடர்புவழி
அகிலத்தில் எமையீன்று
அரவணைத்துக் காத்த தாய்
உதிரத்தை பாலாக்கி
உயிர் மெய்யாய் உணர்வூட்டி
உளமெல்லாம் எமக்காக்கி
உயர்விற்கு வழிகாட்டி
கல்விக்கு அகரமிட்டு
கண்காணித்து வளர்த்ததாயே
கைமாறு கருதாத கருணையின் பேரன்பே
பாசத்தின் பகிர்வினில் பாரபட்சமற்ற தாயே
நேசத்தின் நிறைமதி- நீங்கள்
நேர்மைக்கு நீதிபதி!
அன்பிற்கு அட்சயம்
அம்மா என்னும் பொக்கிசம்
இதயத்தின் தாரகை
வரமெனப் பெற்றதாய்
வாழ்வெல்லாம் போற்றுவேன்.
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading