மாறியதே வாழ்க்கை

நகுலா சிவநாதன் மாறியதே வாழ்க்கை மாறியதே வாழ்க்கை மனம்போன போக்கிலே! கூறியதே கதைகளும் குழம்பிய குட்டைகளாய் வெப்பத்தின் அதிகரிப்பாய் வேறிட வாழ்க்கையும் இன்று தெப்பமாய்...

Continue reading

பாலகஜன்

இளமை துடிப்பு
இதங்களை தேட
இதய பிடிப்பு
உனையே நாட
காதல் பிறந்தது
கல்வி பறந்தது.

கன்னி உனையே
எண்ணி நிறைந்தேன்
கற்கும் காலத்தில்
காதலில் விழுந்தேன்
காலம் முளுவதும்
உன் கரம்பற்றியே
கடந்திட வேண்டி
கடவுளிடம் வேண்டினேன்.

காதலில் நீயும் நானும்
நிறைவாயிருந்தோம்
கால நகர்வில்
காதல் தளர்ந்தது
நீ காட்டும் அன்பினில்
களவு தெரிந்தது
அளவே இன்றி
பிடித்துப்போன உந்தன்
நடிப்பும் புரிந்தது.

வலித்தது என் இதயம்
மொத்த வாழ்வும்
உன் மொத்த நடிப்பில்
சிதறு தேங்காயாய்
சிதறிப்போனது
நடிப்போடு நீ பழகியது
உன் பிடிப்போடு மட்டுமே!
இருந்த எனக்கு புரியவில்லை.

பிரியத்தோடு நான்!
பிரிதலோடு நீ!
இதில் புரிதல் எங்கே
ஜெயிப்பது.
என்னை பிரிந்து போ
பறுவாயில்லை இனி வேறெந்த
ஆண்களின் வாழ்வையும்
உந்தன் நடிப்பால்
நாசம் செய்யாதே
நான் பட்ட வலி போதும்
இதையாவது என்
காதலுக்காக செய்
என் நினைவாகி போனவளே!

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading