” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பாலதேவகஜன்

ஆண்டுக்கு ஒருமுறை
ஆனந்த விடுமுறை
அதுவும் எனைவிட்டு
அகன்றுதான் போனதே.

விடுமுறை விடுப்போடு
ஒருமுறையேனும்
தாய்மண்ணை முத்தமிடும்
முனைப்போடு கரைகின்றேன்.

காலமும் ஓர் நாள் மாறும்
என் காயமும் ஊர்போய் சேரும்
கனிந்திடும் காலம் என்
துணிவே துணையாய் வெல்லும்.

கால பெரும் பிரிவை
கனவிலும் நினைத்ததில்லை
வாழ்வு கொடும் துயரில்
வாடுமென்றும் நினைக்கவில்லை.

எண்ணமெல்லாம் உன் நினைப்பு
ஏதிலியாய் என் தவிப்பு
கண்ணாக காத்து நின்ற தாய்மண்ணே!
நீயே என் பெரும் பிடிப்பு.

எனக்கான விடுமுறை
நான்கு சுவருக்குள்
நசுங்கியே கடந்திடும்
நிலையென்றுதான் மாறுமோ?

அடுத்தவர்களை விடுமுறைக்காய்
வழியனுப்பும் போதெல்லாம்
என் விழியோரம் ஈரம்
விரைவுடனே பாயும்.

காலத்தின் கட்டாயம்
காத்திருத்தல் என்றால்
காத்து கிடந்திருப்பேன்
இது சதிவலைக்கான காத்திருப்பு.

கஜவரின் கூடாரத்துக்குள்
கரைகின்ற என் தாய்மண்ணே!
உனை காத்திட காத்திருக்கின்றேன்
விரைந்து உன் மடிசேர
முடிவொன்று தாறாய் என் முத்தே!

Nada Mohan
Author: Nada Mohan