” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பால தேவகஜன்

பங்குனி

பண்ணாகம் விசவர்த்தனை
பதியுறையும் வேலையா!
உன்னை கொண்டாடி மகிழ்கின்ற
பங்குனியும் வருகுதையா!

அங்கு நீ! இங்கு நான்
ஆனதே என் கவலை
எப்போது உன் அழகை
அருகிருந்து பார்ப்பேனோ

ஆறு மனம் ஆற்றிடவே
ஆறு முகன் வருகின்றான்
ஆறு படை வீடுடையான்
அகிலம் காக்க வருகிறான்.

கூறுமடியார் குறைதீர்க்க
குமரனவன் வருகின்றான்
கொள்ளை அழகு கொண்டிங்கே
குணநிதியான் வருகின்றான்.

வண்ண மயில் மேலமர்ந்து
வடிவேலன் வருகின்றான்
எம் எண்ணமதை ஈடேற்ற
வேலேந்தி வருகின்றான்.

உலக பெருமயிலில் மீதமர்ந்து
உமையான் மகன் வருகின்றான்
விடலைகள் தோளமர்ந்து
வினைதீர்க்க வருகின்றான்.

நான் அருகிருந்த காலங்களை
கண்ணனைக்க வைக்கின்றான்
நான்விலகிவந்த காலங்களை
வேதனைக்குள் புதைக்கின்றான்.

வேட்டிகட்டி நான் போன
திருவிழாவும் இதுதானே
விடிய விடிய கொண்டாடிய
பெருவிழாவும் இதுதானே.

ஊரெல்லாம் காசு சேர்த்து
ஊர் வியக்க விழாசெய்து
எம் பருவங்களின் பலம்காட்டிய
திருவிழாவும் இதுதானே.

எட்டாம் திருவிழாவுக்காய்
எத்தனை நாள் காத்திருப்போம்
அத்தனை இன்பம் தரும்
உச்சமான திருவிழாவும் இதுதானே.

உடனிருந்து உனை சுமக்க
மனமிருந்து தவிக்குதையா!
புலம்பெயர்ந்த தேசத்தில்
புலம்பியே வாழ்வு போகுதையா!

குறைதீர்க்கும் கந்தையா!
மறுமுறை என்னையும் அழையையா!
நிறைவுகளின்றிய நிகழ்காலமதை
நிறைவுகளாய் ஆக்கி தாருமையா!

Nada Mohan
Author: Nada Mohan