” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

பால தேவகஜன்

ஆறு மனமே!

நீ! சற்றும் தயங்காமல்
இத்தோடு முற்றும் என்றாய்
நானோ! முற்றும் முளுதாக
வியந்தே நின்றேன்.
என் பாசம் உணராமல்
நீ! பிரியநின்றாய்
உன் வேசம் புரியாமல்
நானோ மோசம் போனேன்.

புரிதலை தொலைத்தது
எம் உறவு அல்ல
நீ! மட்டும்தான்
நான் என்றுமே
புரிதலோடுதான் இருக்கின்றேன்.
ஈரமிழந்த நிலத்தின் வரட்சி
பசுமையை ஏற்காத்து போல்
உன்னை இழந்த என் வாழ்வு
பசுமையை ஏற்க மறுக்கின்றது.
பார்க்கும் இடமெல்லாம்
நாம் காதலோடு கடந்த
உன் நினைவுத் துளிகள்!
கண்களை நனைக்கின்றது.

வேஷங்களோடு நீ!
பாசங்களோடு நான்!
இதில் மோசம் போனது
இன்று என் வாழ்வானாலும்
என்றோ ஒரு நாள்
உன் வாழ்வும் மோசமாய் போகலாம்
அன்று அந்த மோசத்தில்
நீ! உணர்வாய்
நான் உன்மேல் கொண்ட பாசத்தை!

என் மனது தவிப்பதையறிந்தும்
நீ! உணர்விழந்தவளாய்
எனை உதறிதள்ளிவிட்டு
பிரிவென்ற பேராயுதத்தால்
என் தாக்கி என் வாழ்வையே
காயமாக்கிய சென்றாலும்
என்றைக்குமே நான் உன்னை
வெறுக்கவே மாட்டேன்
ஏனேன்றால் நான் உன்மேல்
கொண்ட காதல் உண்மையானது
என்றைக்குமே நீ! என் காதலி!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading