” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பிரபஞ்சம் என்னும் பெண்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 233
அமைதியான முழுமதியாய்
இருளை ஒழித்து இல்லத்தில்
ஒளி சேர்க்கும் பேரழகு பெட்டகமே
அன்புகொண்டு அணைப்பாள் குடும்பத்தையே

அறிவு ஆற்றல் கொண்டவள்
தேவதை என்பார் பெற்றவர்
உனக்கு எதுவும் தெரியாது
உன்னால் முடியாது என்பார் துணைவர்

இடி மின்னல் மழை காற்று
எதையும் தாங்கும் தரணி போல
வறுமையான வாழ்விலும் மகிழ்வுடன்
இல்லறம் நடத்தும் சக்தியே

வனவிலங்கின் அரசன் மேல்
அமர்ந்திருந்து அடக்கியாளும் அரசியே
உன் திறமையை வளர்த்து
சமுதாயத்தை சிறப்பாக நடத்து புலம்பாமல்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan