” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

புதிதாய் வரு வருடம்

இரா.விஜயகௌரி

நொடிகளாய் நிமிடங்களாய்
மணித்துளிகளாய். நாட்களாய்
தினமும் செயல் கொண்ட திங்களாய்
திரட்சியின் புரட்சியாய் நகர்ந்த -வருடம்

நம்பிக்கை விதை விதைத்து மாற்றம்
மாற்றம் ஒன்றே மாறாதென கருவாகி
முயற்சிகளின் முப்பரிமாணக் கோர்வையில்
நாளும் இழைந்தெழும் வாழ்வியல் கோலம்

எழுந்தவன் விழுந்தாலும் புதைவதில்லை
ஏற்றங்கள் செயல் கொள்ள மறந்ததில்லை
புதிரென வாழ்செயல்கள் மறைவதில்லை
எதிர்கொள்ள விளைந்தவன் தோற்றதில்லை

அதனால் திட்டங்களும் தீர்மானங்களும் நமக்காக
நாமுணர்ந்து செயல்தீட்டின் வெற்றியின் படிகளாய்
தினமும்தினமுமாய் விளைந்தெழும் பயிரென
நாளைய வழிகாட்டிகளாய் நாமே வருடத்தை வளம் கொழிப்போம்

Nada Mohan
Author: Nada Mohan