புனிதா கரன் கவி 06

பாரதி கண்ட புதுமைப் பெண்ணே//
தாரகை உனையே தரணி வியந்திட//
வீசும் தென்றலாய் வாசம் வீசியே//
பேசும் மொழியில் வீச்சைக் காட்டி//
கல்வி கற்று கசடற வாழ//
பல்கிப் பெருகுமே பலவகை நன்மையும்//
சீராய் நீயும் சிறந்தே விளங்கிட//
சோதியாய் நீயும் ஒளிர்ந்திடல் அழகே//
அச்சம் விடுத்து அகந்தை யின்றி//
அடங்க மறுத்தே அகிம்சை வழியே//
தன்னல மற்று தெளிதல் அறமே//
முடியா தென்ற முயலாமை விடுத்து//
முடியு மென்றே முயல்தல் சிறப்பே//
வையம் போற்றி வாகையும் சூடும்//
வாழ்வாங்கு வாழ வாழ்த்தி வணங்கும்//

புனிதா கரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading