” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

புலத்திலே பொங்கல்

Selvi Nithianandan (697)

புலத்திலே பொங்கல்

புலத்திலே பொங்கல்
புதுமை நிலையே
நிலத்திலே மறந்து
நிஜமான பொங்கல்

விடியலேத் தேடியே
விரைந்திடும் வேளை
மறைந்திடும் நினைவு
கரைந்திடும் பொழுது

அட்டிலில் பொங்கல்
அடிமனசு வெம்பல்
ஆயிரம் மலர்வு
அகமும் அடங்கல்

காலையில் வேலை
கதிரவன் இல்லை
களிப்பினை மறந்து
கழித்திடும் நாளாய்

Nada Mohan
Author: Nada Mohan