சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பூக்களின் புதுவசந்தம்

பூக்களின் புதுவசந்தம்

வசந்தம் வந்தாலே சுகந்தம் வருமே!
வாசம் கூட வந்திடுமே!
மகரந்தம் மணியாக சொரியும்
மாட்சிகள் மாண்போடு பெருகும்
காட்சிகள் பச்சையாய் தெரியும்
காலங்கள் பூத்துக் குலுங்கும்

கதிரவன் ஒளியின் பெருமை
காணக் கண்கோடி மகிழ்வு
பதிகள் தோறும் பச்சை மரங்கள்
பார்போர் கண்கள் விருந்து
பழமரங்கள் செழிப்பு பாரீர்
பாரில் விளைச்சல் பெருகும் காணீர்

இலைகள் துளிர்ப்பு
இளமையின் துடிப்பு
மலைகள் தோறும் அருவிகள்
மாலையாய் சொரியும் அழகு
குயிலின் ஓசை இனிமை
குருவிகள் இராகப் பசுமை
தென்றலின் வருகையும்
தொம்மாங்கிசையும் மன்றம்
மகிழும் நல்வரமே!

பூக்களின் புதுவசந்தம்
பூரிப்பாய் மனங்களில்
பாக்களின் பண்ணும்
பாடலின் இசையமுதும்
நாட்களை நினைக்கவைக்கும்
நாநிலம் செழிக்க வைக்கும்

நகுலா சிவநாதன் 1757

Nada Mohan
Author: Nada Mohan