” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பூக்களின் புதுவசந்தம்

பூக்களின் புதுவசந்தம்

வசந்தம் வந்தாலே சுகந்தம் வருமே!
வாசம் கூட வந்திடுமே!
மகரந்தம் மணியாக சொரியும்
மாட்சிகள் மாண்போடு பெருகும்
காட்சிகள் பச்சையாய் தெரியும்
காலங்கள் பூத்துக் குலுங்கும்

கதிரவன் ஒளியின் பெருமை
காணக் கண்கோடி மகிழ்வு
பதிகள் தோறும் பச்சை மரங்கள்
பார்போர் கண்கள் விருந்து
பழமரங்கள் செழிப்பு பாரீர்
பாரில் விளைச்சல் பெருகும் காணீர்

இலைகள் துளிர்ப்பு
இளமையின் துடிப்பு
மலைகள் தோறும் அருவிகள்
மாலையாய் சொரியும் அழகு
குயிலின் ஓசை இனிமை
குருவிகள் இராகப் பசுமை
தென்றலின் வருகையும்
தொம்மாங்கிசையும் மன்றம்
மகிழும் நல்வரமே!

பூக்களின் புதுவசந்தம்
பூரிப்பாய் மனங்களில்
பாக்களின் பண்ணும்
பாடலின் இசையமுதும்
நாட்களை நினைக்கவைக்கும்
நாநிலம் செழிக்க வைக்கும்

நகுலா சிவநாதன் 1757

Nada Mohan
Author: Nada Mohan