” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பூக்கள் பூத்திடும் வசந்தம்

“ பூக்கள் பூத்திடும் வசந்தம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 11.04.2024

சித்திரையும் வைகாசியும்
செதுக்கி வைத்த சிற்பமாய்
பூக்கள் பூத்திடும் வசந்தகாலம்
பூவையரும் மகிழ்ந்திடும் புத்துணர்வுக் காலம்
சித்தமுடன் கோடைமகளை வரவேற்க
வனப்போடும் செழிப்போடும்
வாசனையோடு வந்துவிட்டாள் வசந்தமகள் !

கண்ணுக்கு விருந்தாகும் பசுமை
கண்கவரும் வசந்தகாலப் பெருமை
மனதிற்கு இசைவான மலர்க்கூட்டம்
மனதினை மயக்கிடும் வண்ண்க் கோலம்
பட்சிகள் இனிய கீதமிசைக்க
வட்டமிட்ட சில்வண்டுகளும்
சட்டெனவே தேனைக் குடித்து மகிழும்
பூக்கள் பூத்திடும் வசந்த காலம் !

கனிதரு மரங்களும் பூத்துக் குலுங்கிட
கவினுறு சோலையும் எழிலைக் கூட்டிட
மனமெனும் மாளிகையும் மகிழ்வினைத் தந்திட
தனமெனவே வந்தாள் வசந்தப் பெண்ணாள்
வரமாய் கிடைத்த வசந்தகாலம்
வாழ்வின் வண்ணப் பொற்காலமே !

Nada Mohan
Author: Nada Mohan