சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பூக்கள் பூத்திடும் வசந்தம்

“ பூக்கள் பூத்திடும் வசந்தம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 11.04.2024

சித்திரையும் வைகாசியும்
செதுக்கி வைத்த சிற்பமாய்
பூக்கள் பூத்திடும் வசந்தகாலம்
பூவையரும் மகிழ்ந்திடும் புத்துணர்வுக் காலம்
சித்தமுடன் கோடைமகளை வரவேற்க
வனப்போடும் செழிப்போடும்
வாசனையோடு வந்துவிட்டாள் வசந்தமகள் !

கண்ணுக்கு விருந்தாகும் பசுமை
கண்கவரும் வசந்தகாலப் பெருமை
மனதிற்கு இசைவான மலர்க்கூட்டம்
மனதினை மயக்கிடும் வண்ண்க் கோலம்
பட்சிகள் இனிய கீதமிசைக்க
வட்டமிட்ட சில்வண்டுகளும்
சட்டெனவே தேனைக் குடித்து மகிழும்
பூக்கள் பூத்திடும் வசந்த காலம் !

கனிதரு மரங்களும் பூத்துக் குலுங்கிட
கவினுறு சோலையும் எழிலைக் கூட்டிட
மனமெனும் மாளிகையும் மகிழ்வினைத் தந்திட
தனமெனவே வந்தாள் வசந்தப் பெண்ணாள்
வரமாய் கிடைத்த வசந்தகாலம்
வாழ்வின் வண்ணப் பொற்காலமே !

Nada Mohan
Author: Nada Mohan