17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
பூமாதா
„பூமாதா” கவி …. ரஜனி அன்ரன் (B.A) 18.04.2024
அழகான நீலத்தேவதையே
ஆதவனைச் சுற்றிவரும் தாரகையே
கோடி மக்களை கோடி உயிர்களை
மடி மீது சுமக்கும் பூமாதாவே
பொன்னுலகம் தந்த தாயே
நீ எங்கள் பொக்கிஷம்
நீ எங்கள் தாய் !
கடல் கொண்ட கரைகளும் அலைகளும்
சலசலக்கும் ஆறுகளும் ஓடைகளும்
எழிலான மலைச்சிகரங்களும்
எண்ணற்ற வளங்களும் வனங்களும்
இயற்கையின் வனப்புக்களும்
எல்லாம் நீ தந்த கொடையே
உன் அகம் கொண்ட செல்வங்களே !
பூக்கள் சிரிக்கும் பூந்தோட்டம் நீ
ஆறுகள் பாய்ந்திடும் அதிசயகூடம் நீ
மனதை மயக்கும் மண்வாசம் நீ
தங்கமும் வைரமும் கொண்ட மங்கை நீ
பச்சைப் பட்டாடை போர்த்திய பாவை நீ
உணவும் நீரும் காற்றும் எமக்குத் தந்து
உயிர் வாழ வைக்கும் உத்தமியே
பாதுகாப்போம் பக்குவமாய் உன்னை
பூமாதாவே நீ எங்கள் குலமாதா !
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...