சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பூமாதா

„பூமாதா” கவி …. ரஜனி அன்ரன் (B.A) 18.04.2024

அழகான நீலத்தேவதையே
ஆதவனைச் சுற்றிவரும் தாரகையே
கோடி மக்களை கோடி உயிர்களை
மடி மீது சுமக்கும் பூமாதாவே
பொன்னுலகம் தந்த தாயே
நீ எங்கள் பொக்கிஷம்
நீ எங்கள் தாய் !

கடல் கொண்ட கரைகளும் அலைகளும்
சலசலக்கும் ஆறுகளும் ஓடைகளும்
எழிலான மலைச்சிகரங்களும்
எண்ணற்ற வளங்களும் வனங்களும்
இயற்கையின் வனப்புக்களும்
எல்லாம் நீ தந்த கொடையே
உன் அகம் கொண்ட செல்வங்களே !

பூக்கள் சிரிக்கும் பூந்தோட்டம் நீ
ஆறுகள் பாய்ந்திடும் அதிசயகூடம் நீ
மனதை மயக்கும் மண்வாசம் நீ
தங்கமும் வைரமும் கொண்ட மங்கை நீ
பச்சைப் பட்டாடை போர்த்திய பாவை நீ
உணவும் நீரும் காற்றும் எமக்குத் தந்து
உயிர் வாழ வைக்கும் உத்தமியே
பாதுகாப்போம் பக்குவமாய் உன்னை
பூமாதாவே நீ எங்கள் குலமாதா !

Nada Mohan
Author: Nada Mohan