ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பூமி

ராணி சம்பந்தர்

பூமி தன்னைத்தானே
சாமியாய்ச் சுற்றிச்
சுற்றி சுழல்கிறதே

வானமோ ஊற்றும்
பனிப்புகாரில் பற்றி
தலை முழுகுகிறதே

ஈரந் துவட்டாததிலே
ஜலதோஷ வடிநீரோ
மழையாகப் பொழிகிறது

அச்சு அச்சு எனத் தும்மல்
இடியாகப் பொறுக்காத
பூமியோ சுழல் காற்று வீசி
தலையைத் துவட்டுகிறது

ஆனந்தம் பொங்க மின்னல்
ஒளி வீசியே மிளிர்கின்றது
பூமித்தாய் மீண்டும் தன்னைச்
சுற்றுவதுடன் தன் குழந்தைகள்
அனைவரையும் சுற்றி மகிழ்கிறது .

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading