” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பெண்கள் எழிற்சி

ரஜனி அன்ரன்

“ பெண்கள் எழிற்சி “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 10.10.2024

உயிரின் தோற்றத்திற்கும்
வாழ்விற்கும் வளர்ச்சிக்கும்
முதன்மையாவள் என்றும் பெண்ணே
பெண்ணின் எழிற்சிக்காய் மண்ணின் மலர்விற்காய்
களமாடிச் சமராடி நஞ்சினை உண்டு
வித்தாகிய முதல் மறவர் குலப்பெண்ணாம்
மாலதியின் நாளாம் அக்டோபர் பத்தாம் நாளே
ஈழப்பெண்கள் எழிற்சித் தினமாச்சு !

எழிற்சியின் வித்தாக
புதுயுகப் பெண்ணாக
புதிய சரிதம் எழுதிய
புதுமைப் பெண்ணாம் மாலதி
விடியல் பாதைக்கு வழிகாட்டி
வரையறை ஒன்றை வரலாறாக்கினாளே !

இன்று அரசியல் சமூகம் பொருளாதாரம்
அறிவியல் இலக்கியம் மருத்துவம் சட்டமென
அத்தனை துறைகளிலும் பெண்ணினம் அபார வளர்ச்சி
இனத்தின் விடியலுக்கான முதற்படியே பெண்ணின் எழிற்சி
தொட்டில் ஆட்டிய கையே இன்று உலகை ஆழும் கை
பெண்கள் எழிற்சியே புரட்சியின் வெற்றி
பெண்கள் எழிற்சியே சமூகத்தின் வளர்ச்சி !

Nada Mohan
Author: Nada Mohan