28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
பேரன்பு
இல்லம் என்னும் நல்லறத்தில்
இடர்கள் இன்றி வாழ்ந்திடவே
மெல்லப் பாயும் பேரன்பு
மேன்மை பெறுமே நல்வாழ்வில்
செல்ல குழந்தை பேசிடவே
சேர்ந்து பழகும் நல்லன்பு
சொல்ல சொல்ல இனித்திடுமே
சொருக்கம் காண விரைந்திடுமே!
உலகில் மாந்தர் வாழ்ந்திடவே
உண்மை அன்பு வேண்டுமென்றும்
கலகம் போக்கும் காரியத்தை
கனிந்து செய்ய முயன்றிடுவோம்
மலரும் தூய அன்பினிலே
மகிழ்ச்சி யுண்டு பாரினிலே
நலமாய் வாழ முனைந்திடுவோம்
நாடே போற்ற வாழ்ந்திடுவோம்
நகுலா சிவநாதன் 1783
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.