” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பேரன்பு

நகுலா சிவநாதன்

பேரன்பு

இல்லம் என்னும் நல்லறத்தில்
இடர்கள் இன்றி வாழ்ந்திடவே
மெல்லப் பாயும் பேரன்பு
மேன்மை பெறுமே நல்வாழ்வில்
செல்ல குழந்தை பேசிடவே
சேர்ந்து பழகும் நல்லன்பு
சொல்ல சொல்ல இனித்திடுமே
சொருக்கம் காண விரைந்திடுமே!

உலகில் மாந்தர் வாழ்ந்திடவே
உண்மை அன்பு வேண்டுமென்றும்
கலகம் போக்கும் காரியத்தை
கனிந்து செய்ய முயன்றிடுவோம்
மலரும் தூய அன்பினிலே
மகிழ்ச்சி யுண்டு பாரினிலே
நலமாய் வாழ முனைந்திடுவோம்
நாடே போற்ற வாழ்ந்திடுவோம்

நகுலா சிவநாதன் 1783

Nada Mohan
Author: Nada Mohan