பொங்குவாய்

சக்தி சிறினிசங்கர்
சிறுமைகளை அகற்றிடவே பொங்கு
சினத்தினையே களைந்திடவே பொங்கு
கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு
காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால்
உறுத்துமட்டும் உரக்கச்சொல் உண்மை
ஊருலகம் கேட்கட்டும் உன்சொல்
இறுதிவரை வென்றிடவே பொங்கு
ஈனர்கள் ஒழிந்திடவே பொங்கு!
பொங்கிஎழு பொங்கிஎழு மனிதா
பார்வைக்கும் என்றேதான் பாரில்
சங்கல்பம் செய்திடவே சொல்வோம்
சரமாரி வேட்டுக்கள் வேண்டாம்
பங்காளி மகனாக மாறி
பாசமுடன் திறப்போமே வாசல்
மங்காத சுடரெனவே மிளிர்ந்து
மனிதமும்தான் விளங்கணுமே எங்கும்!

Author:

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading