சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம்
இது வியாழன் கவிதை நேரம்.
**** பூக்கட்டும் புன்னகை****

கொட்டிடும் முரசு , வெகுவாகக் கொட்டிடட்டும்.
சுற்றிய சஞ்சலங்கள், சுக்குநூறாய்ச் சிதறட்டும்.

வெற்றிகள் குவிந்துமே, வெற்றிக் கொடி ஏற்றட்டும்.
பற்றிய கொடிகளுமே,பலநூறாய்க் காய்க்கட்டும்.
பூக்கட்டும் புன்னகை
மறைத்திடும் இருளது,மெள்ளெனவே விலகட்டும்.
மண்ணினுள் புதைந்தவை,முளைகொண்டு நிமிரட்டும்.

மக்கிய உரங்களெல்லாம்,மண்ணோடு சேரட்டும் .
மொட்டுக்கள்,மலர்களுமாய், பூத்துமே குலுங்கட்டும்.

ஏறிய விலை வாசிகளோ, இறங்கியே சரியட்டும்.
எட்டுக் குப் பத்தாக,மக்களுமோ,அள்ளியே குவிக்கட்டும்.

மூடிய முகக் கவசம்,முற்றாகக் கலையட்டும்.
வாடிய முகங்களிலே,பூக்கட்டும் புன்னகைகள்.
பூக்கட்டும் புன்னகைகள்,பொங்கட்டும் , மகிழ்ச்சி இன்பம்.
பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan