” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

போனும் போராட்டமும்

இரா.விஜயகௌரி

தொலைபேசி இல்லாத துளிகளெல்லாம்
அலைபாயும் எண்ணத்தின் உரசல்களில்
திசைமாறும் தேடல்களின் பயணங்களாய்
பயன் வேண்டி பயன்ற்றும் போவதுண்டு

உதயத்தை உணர்வோடு செப்பி எழும்
உன்னிப்பாய் பலர்சேதி காது தரும்
சில வேளை சினத்தெழுந்து பேசவைத்து
பொருளற்ற பொழுதுக்கும் வழி சமைக்கும்

வலைக்குள்ளே சிக்கி எழும் மீனாகுவோம்
அகப்பட்டால் விடுதலைக்கே வழியில்லையே
தொலைந்தாலோ இழப்புக்கு ஈடில்லையே
எதற்காக என்றெண்ண புரிதல் இல்லை

நல்லவைக்கும் தீயவைக்கும் கருவாகுதே
நாணி எழும் பொழுதுகட்கும் வித்தாகுமே
இளையவர் கை இழைவதெல்லாம் சுழற்சி கொள்ள
உதயத்துள் பின்னியெழும் மாயவலைதான்

Nada Mohan
Author: Nada Mohan